search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஹிதி ஹசன்"

    கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி தொடரை வென்றது வங்காள தேசம். #BANvWI
    வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியின் மூலம் 1-1 என சமநிலையில் இருந்தது.

    இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை என்பதால் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கின. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. ஷாய் ஹோப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மற்ற வீரர்களை மெஹிதி ஹசன் சொற்ப ரன்களில் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் தடம் புரண்டது. ஹசன் 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    ஷாய் ஹோப் நம்பிக்கையுடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர் லித்தோன் தாஸ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து தமிம் இக்பால் உடன் சவுமியா சர்கார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சவுமியா சர்கார் 81 பந்தில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.


    சதம் அடித்த ஷாய் ஹோப்

    அடுத்து தமிம் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். தமிம் இக்பால் 81 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க வங்காள தேசம் 38.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதையும், மெஹிதி ஹசன் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றனர்.
    டாக்காவில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. மொமினுல் ஹக்யூ (161), முஷ்பிகுர் ரஹிம் (219 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்தது.

    பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. பிரெண்டன் டெய்லர் (110), பிரையர் சரி (53), மூர் (83) ஆகியோரின் ஆட்டத்தால் 304 ரன்கள் சேர்த்தது.

    முதல் இன்னிங்சில் 218 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்காள தேசம் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் மெஹ்முதுல்லா (101 நாட்அவுட்) சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் வங்காள தேசம் ஒட்டுமொத்தமாக 442 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    443 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது. பிரெண்டன் டெய்லர் 4 ரன்னுடனும், வில்லியம்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. வில்லியம்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜிம்பாப்வே-யின் விக்கெட் சராசரி இடைவெளியில் இழந்தது. ஆனால் பிரெண்டன் டெய்லர் மட்டும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பிரெண்டன் டெய்லர் 106 ரன்னுடனும் களத்தில் இருந்தாலும் ஜிம்பாப்வே 83.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காள தேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் தொடரை 1-1 என சமன் செய்தது.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்கள்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. இதில் இருந்து பின்னர் வங்காள தேசத்தால் மீள இயலவில்லை. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார்.



    மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள். 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த வங்காள தேசம் 44 ஓவரில்தான் 200 ரன்னைத் தொட்டது. சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசம் 24 ஓவரில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 128 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது. ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

    இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது. இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.



    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    2-வது விக்கெட்டுக்கு லிட்டோன் தாஸ் உடன் இம்ருல் கெய்ஸ் ஜோடி சேர்ந்தார். கெய்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்காள தேசம் 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் குவித்துள்ளது. லிட்டோஸ் 92 ரன்னுடனும் விளையாடி வருகிறார்.
    ×